செய்திகள்

கவர்னர் ஆய்வு விவகாரம் - சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு

Published On 2018-06-27 11:49 IST   |   Update On 2018-06-27 11:49:00 IST
கவர்னர் ஆய்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்காததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongWalkout
சென்னை:

கவர்னரின் ஆய்வுப் பணிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டே ஆய்வு நடைபெறுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தலைமைச் செயலாளரிடம் சொல்லிவிட்டுத் தான் ஆய்வு நடப்பதாக செய்தி வெளியானது.

இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. அரசின் தலைமைச் செயலாளரிடம் சொல்லிவிட்டு ஆளுநர் ஆய்வுப் பணிக்கு செல்கிறதா இல்லையா? இது அரசுக்குத் தெரியுமா? என முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். ஆனால், முதலமைச்சர் பதில் ஏதும் அளிக்காமல் மவுனமான இருந்தார்.



இதனால் அதிருப்தி அடைந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே காரணத்தை காட்டி காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongWalkout
Tags:    

Similar News