செய்திகள்
மறியலில் ஈடுபட்ட பெண்கள்

ஊத்துக்கோட்டையில் மணல் குவாரியை மூடக்கோரி பெண்கள் மறியல் - 55 பேர் கைது

Published On 2018-06-22 06:56 GMT   |   Update On 2018-06-22 06:56 GMT
ஊத்துக்கோட்டையில் மணல் குவாரியை மூடக்கோரி மறியலில் ஈடுபட்ட 55 பெண்களை போலீசார் கைது செய்னர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.

இந்த நிலையில் ஆரணி ஆற்றில் கடந்த 1-ந் தேதி அரசு மணல் குவாரி தொடங்கியது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

குவாரியை மூடக் கோரி கடந்த 1-ந் தேதி ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகள் மூடப்பட்டன. அனைத்துக்கட்சி மனித சங்கிலி போராட்டமும் 2-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியலும் நடந்தது. எனினும் மணல் குவாரி தொடர்ந்து நடந்து வந்தது.

இதனை கண்டித்தும், மணல் குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தியும் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகில் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட 55 பெண்களை கைது செய்னர். அவர்களை ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

Similar News