செய்திகள்

முதல் மனைவி இருப்பதை மறைத்து இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த டாக்டர் கைது

Published On 2018-06-21 08:42 GMT   |   Update On 2018-06-21 08:42 GMT
முதல் மனைவி இருப்பதை மறைத்து இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த மணலிபுதுநகரை சேர்ந்த பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்:

மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் பிரேம்ஆனந்த் பல் டாக்டர். இவரது மனைவி கடந்த ஆண்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பிரேம்ஆனந்த் விச்சூரைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரிடம் முதல் மனைவி இருப்பதை மறைத்து திருமணம் செய்வதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி பிரேம்ஆனந்த் வீட்டுக்கு திரும்பி வந்தார். இதனை அறிந்த மகாலட்சுமி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து அவர் மணலிபுதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரேம் ஆனந்தை கைது செய்தனர்.


Tags:    

Similar News