செய்திகள்
பஸ் டிரைவர் சிவமுருகன்.

நடத்தையில் சந்தேகம்- மனைவியை குத்தி கொன்ற அரசு பஸ் டிரைவர்

Published On 2018-06-21 08:31 GMT   |   Update On 2018-06-21 08:31 GMT
ஆண்டிப்பட்டி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரசு பஸ் டிரைவர் அவரை குத்திக்கொன்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன் (வயது34). அரசு பஸ் டிவைராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் ராஜா மகள் கல்யாணிபிரியா(24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு தர்‌ஷணாஸ்ரீ, பிரியதர்சினி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கல்யாணி பிரியாவின் நடத்தையில் சிவமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. உறவினர்கள் சமரசம் செய்து வைத்த போதும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே வந்தது.

நேற்றிரவும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவமுருகன் தனது மனைவி என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்தவெள்ளத்தில் சரிந்த கல்யாணிபிரியா சம்பவஇடத்திலேயே இறந்தார்.

பின்னர் சிவமுருகன் தனது 2 பெண்குழந்தைகளையும் தூக்கிகொண்டு ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் சிவமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News