செய்திகள்

கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2018-06-21 09:47 IST   |   Update On 2018-06-21 09:47:00 IST
கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வருவதற்கு 2 நாட்கள் ஆகும்.
ஒகேனக்கல்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

ஏற்கனவே கபினி அணையில் 83 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே மீதம் உள்ளது.

நேற்று மாலை 6 மணி முதல் நீர்திறப்பு 3 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த 15 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வருவதற்கு 2 நாட்கள் ஆகும்.

ஒகேனக்கல்லுக்கு நேற்று 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று 2 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்தது. இன்றும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News