செய்திகள்

புதுப்பேட்டை அருகே தடுப்பு காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

Published On 2018-06-18 17:03 GMT   |   Update On 2018-06-18 17:03 GMT
புதுப்பேட்டை அருகே தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பொன்னாங்குப்பம்-அரசூர் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் ஆதிசே‌ஷன். இவரது மனைவி தனலட்சுமி(வயது55). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் 1,200 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை புதுப்பேட்டை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் தனலட்சுமியை கைது செய்தனர்.

இவர் மீது புதுப்பேட்டை, பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் 8 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரைத்தார். அதன்பேரில் தனலட்சுமியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீசாருக்கு கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார். 

அதன்படி தனலட்சுமி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News