செய்திகள்

மேட்டூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2018-06-11 20:34 IST   |   Update On 2018-06-11 20:34:00 IST
மேட்டூர் பகுதியில் பராமரிப்பு பணி நாளை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்யோகம் இருக்காது.
மேட்டூர்:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் வினியோக கழகம் சார்பில் மேட்டூர் நகர் துணைமின்நிலையம் மற்றும் கொளத்தூர் துணைமின் நிலையம் ஆகிய மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (12-ம்தேதி) மேற்கொள்ளப்படுகிறது. 

ஆகவே இந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட மேட்டூர்நகரம், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாயக் கன்பட்டி, புதூர், கொளத்தூர், பெரியதிண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதன்டா, கண்ணாமூச்சி, காவிந் தபாடி, தின்னப்பட்டி, பாலமலை, அய்யம்புதூர், ஆலமரத்துப்பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ண வாடி, குரும்பனூர், சவேரி யார்பாளையம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(12-ம்) தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது. 

இந்த தகவலை மேட்டூர் செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்தார்.
Tags:    

Similar News