செய்திகள்
திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது
தென்பெண்ணையாற்றில் திறந்தவிடப்பட்ட தண்ணீர் அதிகளவு வருவதால் சாத்தனூர் அணை நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்ட உயரம் 119 அடி. மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 2,463 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1215 கனஅடியாக உள்ளது.
திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்ட உயரம் 119 அடி. மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 2,463 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1215 கனஅடியாக உள்ளது.