செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது காவல்துறை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. #ThoothukudiFiring #PoliceFiringReport
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை தொடங்கியதும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளனர் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இதுவரை நடந்த 7 பேரின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். #ThoothukudiFiring #PoliceFiringReport
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளனர் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இதுவரை நடந்த 7 பேரின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். #ThoothukudiFiring #PoliceFiringReport