செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி - 180 தொகுதிகளை பிடிக்க ரஜினி அதிரடி வியூகம்

Published On 2018-05-22 07:18 GMT   |   Update On 2018-05-22 07:18 GMT
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 180 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முழு திட்டமும் ரஜினியிடம் இருப்பதாக மக்கள் மன்றத்தின் உயர்மட்ட குழு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #RajiniMakkalMandram
சென்னை:

ரஜினி மக்கள் மன்றத்துக்கு 150 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதே என்று நேற்று முன்தினம் பேட்டி அளித்த ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், ‘அது உண்மை என்றால் மகிழ்ச்சி தான்’ என்றார். ரஜினி இப்படி கூறினாலும் அவரிடம் 180 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முழு திட்டமும் கையில் இருப்பதாக மக்கள் மன்றத்தின் உயர்மட்ட குழு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் ரஜினி ரசிகர்கள் என்று கூறும் அவர் 15.02 சதவீதம் பேர் புதிய வாக்காளர்கள் என்று புள்ளி விவரத்தையும் தெரிவித்திருக்கிறார்.

இவர்களில் குறைந்தது 10 சதவீத வாக்குகளாவது நமக்கு வர வேண்டும் என்று ரஜினி திட்டமிட்டுள்ளார். 20ல் இருந்து 22 சதவீத வாக்குகள் பிற கட்சிகளில் இருந்து வரும் என எதிர்பார்க்கிறார்.

அப்படி ரஜினி பார்த்தால் குறைந்தது 80 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் நம்புகிறார்கள். பலமான கூட்டணி, ஓட்டுக்கு பணம் போன்றவை குறுக்கிட்டாலும் கூட குறைந்தது 65 சதவீத வாக்குகளாவது நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். 80 சதவீத வாக்குகளுக்கு குறி வைத்து வேலை செய்தால் தான் 60 சதவீத வாக்குகளை பெற முடியும் என்பதே ரஜினியின் கணக்கு. தனித்து போட்டி என்பதை மனதில் வைத்து தான் இந்த திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்படுகின்றன.

ரஜினியின் கட்சியோடு சில கட்சிகள் கூட்டணி வைத்தால் இந்த வாக்கு சதவீதம் உயரும். எனவே 180 முதல் 200 சீட்டுகள் வரை கண்டிப்பாக வெல்லலாம் என்பதே ரஜினியின் வியூகம். இதற்காக தமிழ்நாடு முழுக்க தொகுதி வாரியான கணக்கெடுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தேர்தல் வரும்போது கட்சி தொடங்குவது தான் நல்லது. இப்போதே கட்சி தொடங்கினால் காலப் போக்கில் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதை வைத்து செல்வாக்கு குறையலாம். ஆனால் இந்த பரபரப்பை அப்படியே கொண்டு சென்று சரியாக தேர்தலுக்கு முன்பு கட்சியை தொடங்குவதே சிறந்தது என்றும் ரஜினி முடிவு செய்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram

Tags:    

Similar News