செய்திகள்

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பெண் பலி

Published On 2018-05-14 13:35 IST   |   Update On 2018-05-14 13:35:00 IST
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது பெண் தவறி விழுந்து மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்:

ஆவடி, கவரபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவி (வயது 35). இவர்கள் உறவினர்களுடன் வெள்ளவேடை அடுத்த கொப்பூரில் உள்ள மாந்தோப்புக்கு மாம்பழம் வாங்க அரண்வாயல் வழியாக வந்தனர்.

அப்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர். இதில் தேவி நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தார். அவரை உறவினர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தேவி உடலை மீட்டனர்.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News