செய்திகள்
காட்டுமன்னார்கோவிலில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
காட்டுமன்னார்கோவிலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அளிஞ்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 34) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்தார்.
இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.