செய்திகள்

போலீசாரின் தற்கொலையை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Published On 2018-05-11 07:57 IST   |   Update On 2018-05-11 07:57:00 IST
போலீசாரின் தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்துறைச்செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.#policesuicide
சென்னை:

பணிச்சுமையால் போலீசார் தற்கொலை செய்துகொள்வதாகவும், எனவே அவர்களின் தற்கொலையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், பல்வேறு இயற்கை சூழல்களில் தொடர்ந்து பணியாற்றுவதாலும், விடுப்பு இல்லாமல் பணிபுரிவதாலும் போலீசார் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மன ரீதியாகவும் ஓய்வு தேவை. எனவே, அவர்களின் தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்துறைச்செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். #policesuicide
Tags:    

Similar News