செய்திகள்

ஜிப்மர் ஊழியர் மயங்கி விழுந்து மரணம்

Published On 2018-05-02 17:56 GMT   |   Update On 2018-05-02 17:56 GMT
ஜிப்மர் ஆஸ்பத்திரி ஊழியர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வம் (வயது 43). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள செல்வத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று செல்வம் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயங்கி விழுந்து இறந்த செல்வத்துக்கு சாந்தி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News