செய்திகள்

சிவகங்கையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மே தின கூட்டம்

Published On 2018-05-02 17:16 GMT   |   Update On 2018-05-02 17:16 GMT
சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை ராமசந்திர பூங்கா கோர்ட் வாசல் அருகே அமைப்புச் செயலாளரும் மாவட்ட செயலாளருமான கே.கே.உமாதேவன் தலைமையிலும் நகர் செயலாளர் அன்புமணி முன்னிலையிலும் மே தினவிழா பொதுகூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பரமநாதன், செய்தி தொடர்பாளர் இளந்தமிழ் ஆர்வலன், தலைமை பேச்சாளர் காஞ்சி பாஸ்கரன், இளைஞர் இளம்பெண் பாசறை இணை செயலாளர் அந்தோணிராஜ், இளைஞரணி இணைச் செயலாளர் இறகுசேரி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர்

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சக்தி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அண்ணாமலை, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி. முத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் மந்தக்காளை, விவசாய பிரிவு இணை செயலாளர் அர்ச்சுணன், தொகுதி செயலாளர் மகேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் குருமுருகானந்தம், சரஸ்வதி கணேசன், கங்கைசக்தி, மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் கார்த்திகைசாமி, சக்தி முருகன், ஆட்டோ பாலா, துரைபிரபு, விஜி, மற்றும் மாவட்ட நகர, ஓன்றிய உள்ளிட்ட ஏராளமான நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News