செய்திகள்
தேவகோட்டை அருகே தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
தேவகோட்டை அருகே தாயிடம் தகராறு செய்த தந்தையை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சின்னக்கோடக்கொடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது45).
இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், அறிவழகன் (17) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அறிவழகன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மலேசியாவில் வேலை பார்த்த சேகர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
இங்கு வந்தது முதல் உமா மகேஸ்வரிக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட் டது. நேற்று இரவும் சேகர் - உமாமகேஸ்வரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் சேகர் கட்டிலில் படுத்துவிட்டார்.
இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த அறிவழகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கட்டிலில் படுத்து இருந்த தந்தையை கழுத்தில் வெட்டினார். இதில் சேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாயுடன் தகராறு செய்ததால் தந்தையை கொலை செய்த அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.
பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சின்னக்கோடக்கொடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது45).
இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், அறிவழகன் (17) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அறிவழகன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மலேசியாவில் வேலை பார்த்த சேகர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
இங்கு வந்தது முதல் உமா மகேஸ்வரிக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட் டது. நேற்று இரவும் சேகர் - உமாமகேஸ்வரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் சேகர் கட்டிலில் படுத்துவிட்டார்.
இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த அறிவழகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கட்டிலில் படுத்து இருந்த தந்தையை கழுத்தில் வெட்டினார். இதில் சேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாயுடன் தகராறு செய்ததால் தந்தையை கொலை செய்த அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.
பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.