செய்திகள்

பண்ருட்டி அருகே பஸ் மோதி வாலிபர் பலி- 3 பேர் படுகாயம்

Published On 2018-04-26 17:18 GMT   |   Update On 2018-04-26 17:18 GMT
பண்ருட்டி அருகே இன்று காலை பஸ் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான பணப்பாக்கத்துக்கு வந்தனர்.

இன்று காலை சுபாஷ் தனது நண்பர் மணிகண்டன் மற்றும் உறவினர் ரோசன் (8) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் இருந்து பணப்பாக்கத்துக்கு புறப்பட்டார்.

பண்ருட்டி அடுத்த பூங்குணம் அருகே சென்னை சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் மாட்டு வண்டி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி மீது மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சுபாஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மணிகண்டன், ரோ‌ஷன் மற்றும் மாட்டு வண்டியில் வந்த எல்.என்.புரத்தைச் சேர்ந்த சாமிநாதன் (45) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News