செய்திகள்
கடலூரில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் குண்டர் சட்டத்தில் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்த போராட்டத்தில் கர்நாடக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது கர்நாடக அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடல் தீபன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி இவரின் குற்ற செயல்களை கட்டுபடுத்தும் பொருட்டு கடல் தீபனை குண்டர்சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாவட்ட கலெக்டர் தண்டபாணிக்கு பரிந்துரை செய்தார் .
இதையேற்று கடல்தீபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார்.
அதன்படி கடல்தீபன் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.