செய்திகள்

கடலூர் அருகே மொபட் மீது லாரி மோதி பெண் பலி

Published On 2018-04-10 12:12 GMT   |   Update On 2018-04-10 12:12 GMT
கடலூர் அருகே மொபட் மீது லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே உள்ள மேற்கு ராமபுரத்தை சேர்ந்தவர் பரமமூர்த்தி. இவரது மனைவி லட்சுமி (வயது 39). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை ராமாபுரத்தில் இருந்து ஒதியடிகுப்பத்தை மொபைட்டில் சென்றனர்.

ஒதியடிகுப்பம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பரமமூர்த்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பரமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News