செய்திகள்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனக்காவலரை தூக்கி வீசிய காட்டு யானை
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனக்காவலரை காட்டு யானை தூக்கி வீசியதில் வனக்காவலர் படுகாயம் அடைந்தார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வனப்பகுதி கேர்மாளம் வனச்சரகத்தில் வன காவலராக இருப்பவர் ராசய்யா (வயது 54). இவர் அரேப்பாளையம் வனத்தில் இன்று காலை பாதுகாப்பு பணிக்கு சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு காட்டு யானை வெளியே வந்தது.
திடீரென அந்த யானை வன காவலர் ராசய்யாவை தூக்கி வீசியது. இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. பிறகு அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.
படுகாயம் அடைந்த ராசய்யாவை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை தூக்கி வீசியதில் காயத்துடன் தப்பிய வனக்காவலரை சக பணியாளர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
சத்தியமங்கலம் வனப்பகுதி கேர்மாளம் வனச்சரகத்தில் வன காவலராக இருப்பவர் ராசய்யா (வயது 54). இவர் அரேப்பாளையம் வனத்தில் இன்று காலை பாதுகாப்பு பணிக்கு சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு காட்டு யானை வெளியே வந்தது.
திடீரென அந்த யானை வன காவலர் ராசய்யாவை தூக்கி வீசியது. இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. பிறகு அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.
படுகாயம் அடைந்த ராசய்யாவை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை தூக்கி வீசியதில் காயத்துடன் தப்பிய வனக்காவலரை சக பணியாளர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.