செய்திகள்

ஸ்டாலின் நடத்திய முதல் மாநாடே ஹவுஸ்புல் ஆகிவிட்டது - திருச்சி சிவா எம்.பி. பேச்சு

Published On 2018-03-25 05:01 GMT   |   Update On 2018-03-25 05:01 GMT
தி.மு.க. செயல்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் நடத்திய முதல் மாநாடே ‘‘ஹவுஸ் புல்’’ ஆகிவிட்டது என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். #TrichySiva #MKStalin #DMK
ஈரோடு:

பெருந்துறை தி.மு.க. மண்டல மாநாட்டில் மாநாட்டு திறப்பாளர் திருச்சி சிவா எம்.பி. பேசினார். அவர் கூறியதாவது:-

செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவர் ஏற்று நடத்தம் முதல் மாநாடு இந்த மாநாடு. மேலும் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்த மாநாடு நடப்பத மேலும் சிறப்பு வாய்ந்தது.

அண்ணாவுக்கு பெரியார் ஒரு பெட்டி சாவியை கொடுத்தார். பிறகு அந்த பெட்டி சாவியை அண்ணா, கலைஞரிடம் ஒப்படைத்தார். இப்போது கலைஞர் அந்த பெட்டி சாவியை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். அந்த பெட்டியில் சொத்து வைடூரியமாகவா இருந்தது? அது தான் இல்லை. தி.மு.க.வின் கொள்கை கோட்பாடு கட்டுப்பாடுகள் தான் இருந்தது.

தமிழகம் தற்போது நம்பி இருப்பது தி.மு.க.வை தான். தி.மு.க. நம்பி இருப்பது உங்களை. முன்னே இருக்கும் உங்களை போன்ற தலைவர்களை தான் இங்கு உட்கார கூட இடம் இல்லாமல் வெளியேயும் மக்கள் குவிந்திருக்கிறார்கள். இப்படி ‘‘ஹவுஸ் புல்’’ ஆன மாநாடும் இந்த ஈரோடு மாநாடு தான்.

மு.க.ஸ்டாலினுக்கு இரு விழிகள் உண்டு. ஒன்று கழக தோழர்கள். இன்னொன்று தமிழக மக்கள். இந்த 2 வழிகளிலும் கண்ணீர் வராமல் பாதுகாக்கப்பட வேண்டியது உங்கள் கடமை.

இப்போது டெல்லியில் அதிகளவில் உச்சரிக்கும் பெயர் மு.க.ஸ்டாலின் பெயரைத் தான். இப்படி அனைவராலும் பேசப்பட்டு வரும் அந்த தலைவர் தான் இனி நமக்கும் தலைவர் முதல்வர்.

தமிழக மாணவர்களை பயமுறுத்தும் நீட் தேர்வு அடுத்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆகும் போது ரத்து ஆகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கோட்டையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர்வது உறுதி.

இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. கூறினார். #TrichySiva #MKStalin #DMK
Tags:    

Similar News