செய்திகள்

பண்ணாரி அருகே பட்டப்பகலில் ரோட்டில் நடமாடும் காட்டெருமை

Published On 2018-03-21 17:08 IST   |   Update On 2018-03-21 17:08:00 IST
பண்ணாரி அருகே வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் கூறினார்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரியை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் இச்சாலை வழியாக 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

வனச்சாலையில் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையை கடப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை பண்ணாரி அருகே திம்பம் மலை அடிவாரத்தில் விநாயகர் கோவிலை அடுத்துள்ள 1-வது கொண்டை ஊசி வளைவை ஒட்டிய வனப்பகுதியில் காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்தது.

இதைக்கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு காட்டெருமையை செல்போனில் படம் பிடிக்க ஆர்வம் காட்டினர்.

தகவலறிந்த பண்ணாரி வனசோதனைச் சாவடியிலிருந்து வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும், காட்டெருமை மனிதர்களை கண்டால் தாக்க வாய்ப்புள்ளதாக அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Similar News