செய்திகள்

ஈரோடு அருகே முதியவர் தற்கொலை

Published On 2018-03-21 15:56 IST   |   Update On 2018-03-21 15:56:00 IST
ஈரோடு அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு, கொல்லம்பாளையம், பெரியகாட்டு நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது68). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.ஊழியர். இவரது மனைவி மல்லிகா(54). இவர்களுக்கு சங்கீதா என்ற மகள் உள்ளார். சங்கீதாவுக்கு திருமணமாகி பெங்களூரில் உள்ளார்.

முருகேசனுக்கு சிறுநீரகம் செயல் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் டயாசெலிஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த முருகேசன் வீட்டில் இருந்த வி‌ஷ மாத்திரை எடுத்து தின்று விட்டார். சிகிச்சைக்காக முருகேசனை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News