செய்திகள்
பவானி அருகே வேன் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து தீ பிடித்தது
பவானி அருகே இன்று மதியம் வேன் மோதிய விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து தீ பிடித்தது எரிய தொடங்கியது. இதில், 2 டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊராட்சி கோட்டை உள்ளது. இந்த பகுதியில் பவானி 3 ரோட்டில் இருந்து ஒரு டிராக்டர் பவானி நோக்கி இன்று மதியம் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த டிராக்டருக்கு பின்னால் ஈச்சேர் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஓடி முன்னால் சென்ற டிராக்டர் மீது வேகமாக மோதியது. இதில் அந்த டிராக்டர் 3 தடவை குட்டிகர்ணம் அடித்து கவிழ்ந்தது.
இதில் மின்சார என்ஜின் உராய்வு ஏற்பட்டு டிராக்டர் தீ பிடித்து குபு... குபு...வென எரிந்தது. அக்கம் பக்கத்தினர் இதை கண்டு உடனடியாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் தேவராஜ், வேன் டிரைவர் சந்துரு ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தால் மேட்டூர் ரோட்டில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊராட்சி கோட்டை உள்ளது. இந்த பகுதியில் பவானி 3 ரோட்டில் இருந்து ஒரு டிராக்டர் பவானி நோக்கி இன்று மதியம் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த டிராக்டருக்கு பின்னால் ஈச்சேர் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஓடி முன்னால் சென்ற டிராக்டர் மீது வேகமாக மோதியது. இதில் அந்த டிராக்டர் 3 தடவை குட்டிகர்ணம் அடித்து கவிழ்ந்தது.
இதில் மின்சார என்ஜின் உராய்வு ஏற்பட்டு டிராக்டர் தீ பிடித்து குபு... குபு...வென எரிந்தது. அக்கம் பக்கத்தினர் இதை கண்டு உடனடியாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் தேவராஜ், வேன் டிரைவர் சந்துரு ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தால் மேட்டூர் ரோட்டில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.