செய்திகள்

காரைக்குடி அருகே மொபட் மீது வாகனம் மோதல்- ஓட்டல் உரிமையாளர் பலி

Published On 2018-03-03 23:10 IST   |   Update On 2018-03-03 23:10:00 IST
மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள கல்லுவயலை சேர்ந்தவர் சின்னகருப்பன் (வயது 48). இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். சம்பவத்தன்று சின்னகருப்பன் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் இருந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அமராவதிபுதூர் பாலம் அருகில் அவர் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கிவீசப்பட்ட சின்னகருப்பன் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துபோனார். இந்த விபத்து குறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News