செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே தூங்கிய கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2018-02-20 09:19 GMT   |   Update On 2018-02-20 09:19 GMT
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் முகமூடி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி இந்திரா நகரை சேர்ந்தவர் பூசம்மாள் (வயது 70).

பூசம்மாள் இரவு வீட்டின் கதவை சாத்தி கொண்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது முகத்தை மறைத்துக் கொண்டு 2 முகமுடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர்.

உள்ளே தூங்கி கொண்டிருந்த பூசம்மாள் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதேபோல் நேற்று இரவு அதே 2 முகமூடி திருடர்கள் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீடடின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

முகமூடி கொள்ளையர்களை கண்டதும் அழகர்சாமி சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 முகமூடி கொள்ளையர்களும் தப்பி ஓடி விட்டனர்.

தொடர்ந்து 2 இடங்களில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News