செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் மின் வாரிய ஊழியர்கள் 300 பேர் ‘ஸ்டிரைக்’

Published On 2018-02-16 22:15 IST   |   Update On 2018-02-16 22:15:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் 300 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை:

ஆசிரியர்கள், அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தற்போது மின் வாரிய ஊழியர்களும் ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை,காரைக்குடி ஆகிய 4 மின் வாரிய கோட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதன் காரணமாக மின் வினியோகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மின் கட்டண வசூல் மையங்களும் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். #tamilnews

Similar News