செய்திகள்

காஞ்சிபுரம் அருகே ஓட்டலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published On 2018-02-14 15:56 IST   |   Update On 2018-02-14 15:56:00 IST
காஞ்சிபுரம் அருகே ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #poisonousgas #killed
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது போந்தூர். இங்குள்ள ஒரு ஓட்டலில் இன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது, திடீரென விஷவாயு அவர்களைத்  தாக்கியது. இதனால் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். 

இதில், 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஷ வாயுவை சுவாசித்து மயக்கமடைந்த 2 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews #poisonousgas #killed

Similar News