செய்திகள்

மானாமதுரையில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் கணவர்

Published On 2018-02-10 18:09 IST   |   Update On 2018-02-10 18:09:00 IST
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது30). இவருக்கும், மானாமதுரை தாலுகா கீழபசலையை சேர்ந்த முருகன் (34) என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி தனது மகனுடன் பரமக்குடியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் முருகன் மனைவிக்கு தெரியாமல் காஞ்சனா என்ற பெண்ணை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பரமேஸ்வரி மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதில், எனது கணவர் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டார். மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தினார். இதற்கு உடந்தையாக அவரது தாயார் ராமலட்சுமி, உறவினர்கள் ராஜம்மாள், லதா, சேது, கீதா, முத்துராமு, காஞ்சனா ஆகியோர் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அமிர்தம் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 8 பேரை தேடி வருகிறார். #tamilnews

Similar News