செய்திகள்

ஈரோட்டில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய பொதுமக்களுக்கு வாய்ப்பு

Published On 2018-01-29 17:31 IST   |   Update On 2018-01-29 17:31:00 IST
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதார் அட்டைக்காக புகைப் படம் எடுக்கும் பணி எல்காட் நிறுவனத்தின் மூலமாக நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதார் அட்டைக்காக புகைப் படம் எடுக்கும் பணி எல்காட் நிறுவனத்தின் மூலமாக நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால் இம்மையங்களுக்குச் சென்று கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர்,பிறந்ததேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும்மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உரிய ஆதாரங்களுடனும், உரியசேவை கட்டணம் செலுத்தியும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

மேலும், புகைப்படம், கைவிரல்ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் உரியசேவை கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். ஞாயிறு விடுமுறை நாள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதார் பதிவு மையங்களின் விபரம் வருமாறு:-

1. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு.

2. மாநகராட்சி அலுவ லகம், ஈரோடு

3.முதலாவது மண்டல அலுவலகம், சூரியம் பாளையம்

4. இரண்டாவதுமண்டல அலுவலகம், பெரியசேமூர்

5. மூன்றாவது மண்டல அலுவலகம், சூரம்பட்டி

6. நான்காவது மண்டல அலுவ லகம், காசிபாளையம்

7. நகராட்சி அலுவலகம், பவானி

8. நகராட்சி அலுவலகம், கோபிசெட்டிபாளையம்

9. நகராட்சி அலுவலகம், புஞ்சை புளியம்பட்டி

10. நகராட்சி அலுவலகம், சத்தியமங்கலம்.

Similar News