செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி மரணம்

Published On 2018-01-29 09:00 GMT   |   Update On 2018-01-29 09:00 GMT
சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

இலங்கையில் கொழும்புவைச் சேர்ந்தவர் நூருல்லா (68). சென்னைக்கு வந்திருந்த நூருல்லா ஊர் திரும்புவதற்காக இன்று காலையில் சென்னை விமான நிலையம் சென்றார்.

பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானத்தில் ஏறுவதற்காக சக பயணிகளுடன் நூருல்லாவும் வரிசையில் நின்றார்.

அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே விமான நிலைய டாக்டர்கள் விரைந்து சென்று அவரை பரிசோதித்தனர். அப்போது மாரடைப்பால் அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News