செய்திகள்

தாளவாடி அருகே ஓடும் டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது

Published On 2018-01-03 17:16 IST   |   Update On 2018-01-03 17:16:00 IST
தாளவாடி அருகே சோளத்தட்டு ஏற்றி சென்ற டிராக்டர் மின் கம்பம் மீது உரசியதில் தீ பற்றி எரிய தொடங்கியது.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ளது தர்மாபுரம். இங்கிருந்து தொட்டகாஜனூருக்கு சிவப்பா என்பவர் டிராக்டரில் சோளத்தட்டு ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

தாளவாடி அருகே சூசைபுரம் பிரிவில் வந்த போது ரோட்டில் குறுக்கே சென்ற மின் கம்பி சோளத்தட்டு மீது உரசியது. இதில் சோளத் தட்டு தீப்பிடித்து மள...மள...வென எரிந்தது.

இதை கண்டவர்கள் டிரைவரிடம் சொன்னதால் உஷாரான சிவப்பா டிராக்டரை நிறுத்தி கீழே குதித்தார்.

அவரும் அவருக்கு உதவியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு ஓடி வந்தனர். இதனிடையே டிராக்டரும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

மேலும் தீப்பிடித்து எரியாமல் இருக்க வேகம் வேகமாக டிராக்டரில் எரிந்து கொண்டிருந்த சோளத்தட்டுகளை நடுரோட்டில் கொட்டினர்.

டிராக்டரில் பிடித்த தீயையும் அணைத்தனர். சுமார் 40 நிமிடம் போராடி டிராக்டரில் பிடித்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த திடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News