பண்ருட்டியில் மொபட் மீது அரசு பஸ் மோதல்: கணவன்-மனைவி பலி
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த ஆனத்தூர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மங்கவரத்தாள். இவர்கள் 2 பேரும் அதே ஊரை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை அழைத்துக் கொண்டு நேற்று இரவு மொபட்டில் புதுப்பேட்டையில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றனர்.
மணம் தவழ்ந்தபுத்தூர் அருகே சென்று கொண்டு இருந்த போது பண்ருட்டியிலிருந்து அரசூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் திடீரென்று மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கரும், மங்கவரத்தாளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாந்தி காயம் அடைந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவலறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ் பெக்டர்கள் சவ்வாது உசேன், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரசு பஸ் டிரைவரை கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.