செய்திகள்
பண்ருட்டியில் லாரி மோதி சிற்பி பலி
பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிற்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த திருவதிகை ஓரையூரான் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த் (60). இவர் கடந்த 14-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சங்கர் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்த் மற்றும் சங்கர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இதனால் படுகாயம் அடைந்த இவர்கள் இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைகாக புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்த் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.