செய்திகள்
ஈரோடு ரெயில்நிலையத்தில் 2 திருட்டு செல்போனுடன் சிக்கிய வாலிபர்
ஈரோடு ரெயில் நிலையத்தில் 2 திருட்டு செல்போனுடன் சிக்கிய வாலிபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம் பழவஞ்சி பாளையம், குமரன் காலனியை சேர்ந்த சிங்கராஜி(வயது38) என தெரிய வந்தது.
சிங்கராஜி ரெயிலில் செல்லும் பயணிகளிடம் செல்போனை திருடுவதை தொழிலாக வைத்துள்ளான். அவனிடம் இருந்து 2 திருட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.