செய்திகள்

பொத்தேரி ரெயில் நிலையம் அருகே பெண் கொலையில் வேலூர் வாலிபர் கைது

Published On 2017-09-28 09:50 GMT   |   Update On 2017-09-28 09:50 GMT
பொத்தேரி ரெயில் நிலையம் அருகே பெண் கொலையில் வேலூரை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:

பொத்தேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை ஒட்டியுள்ள முட்புதரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலையுண்ட பெண் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சபீதா (32) என்பது தெரிந்தது.

இது தொடர்பாக வேலூரை சேர்ந்த சாதிக் உசேனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கொலையுண்ட சபீதா கணவரை பிரிந்து வாழ்ந்து பிராட்வேயில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது.

சபீதாகக்கு சாதிக் உசேனுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இதில் திருமணம் செய்துகொள்ளும்படி சாதிக் உசேனை அவர் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த தகராறில் சபீதா கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News