செய்திகள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை

Published On 2017-09-25 12:09 GMT   |   Update On 2017-09-25 12:09 GMT
ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. தாளவாடி பகுதியில் ரோட்டோரம் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இரவில் மாவட்டம் முழுவதும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பல இடங்களில் பரவலாகவும் மழை கொட்டியது.

இந்த மழையால் ஈரோடு மாவட்டம் மீண்டும் குளுமையானது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானி கவுந்தப்பாடி, அம்மாபேட்டை ஆகிய இடங்களில் அதிகபட்ச மழை பதிவாகி இருந்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் பெருந்துறை, வரட்டுப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை மற்றும் குண்டேரிபள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால் ரோட்டின் இருபுறத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. வெயிலின் பிடியிலிருந்து தப்பி மீண்டும் ஈரோடு குளுமையானது.

வனப்பகுதியான தாளவாடி பகுதியில் ரோட்டோரம் உள்ள பழமையான ஒரு வாத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News