செய்திகள்

ஆப்பக்கூடலில் பிளஸ்-1 மாணவி மாயம்

Published On 2017-09-24 17:21 IST   |   Update On 2017-09-24 17:21:00 IST
ஆப்பக்கூடலில் பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி மாயமானர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஆப்பக்கூடல், கல்லாங்காட்டுமேட்டை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் கவுசல்யா (வயது16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திடீரென பள்ளிக்கு போகமாட்டேன் என வீட்டில் இருந்துள்ளார்.

கவுசல்யாவின் பெற்றோர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனால் கவுசல்யா மனவேதனையுடன் இருந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு கவுசல்யா வெளியேறினார். அதன்பிறகு 3 நாட்களுக்கு பின்னர் தான் திரும்பி வந்துள்ளார். இதையடுத்து கவுசல்யாவை பெற்றோர் கண்டித்து வீட்டில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கவுசல்யா வீட்டை விட்டு வெளியே சென்றவர், திரும்பி வீட்டிற்கு வர வில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News