செய்திகள்

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2017-09-22 11:08 GMT   |   Update On 2017-09-22 11:08 GMT
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கஸ்பாபேட்டை அடுத்த செங்கரைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது67).

ராமசாமி சம்பவத்தன்று கஸ்பாபேட்டை, பூந்துறை ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வகையில் ராமசாமி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News