செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி

Published On 2017-08-30 11:36 GMT   |   Update On 2017-08-30 11:39 GMT
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கீரனூர்:

கீரனூர் அருகே உள்ள கொத்தமங்கலப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.

இவர் நேற்று இரவு கொத்தமங்கலப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீரனூரில் அடகு கடை நடத்தி வரும் ராஜேஷ் (28) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற போது எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற மாரிமுத்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News