செய்திகள்

வறட்சி நிவாரணம் கோரி புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-08-17 14:59 GMT   |   Update On 2017-08-17 14:59 GMT
வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை:

வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரகுபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முகமதலி, ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் செல்லப் பாண்டியன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் அஸ்ரப்அலி, தி.மு.க. சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன், ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News