செய்திகள்

வெள்ளோடு அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயம்

Published On 2017-08-02 15:24 IST   |   Update On 2017-08-02 15:24:00 IST
வெள்ளோடு அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு அடுத்த வெள்ளோடு அருகே தண்ணீர் பந்தல், கவசப் பள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் அனிதா (வயது22). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த முத்துராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது.

கணவன்-மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, அனிதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று அனிதா வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், இதுவரை திரும்பி வரவில்லை. அனிதாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் கிடைக்க வில்லை.

இதுகுறித்து அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News