செய்திகள்

நெய்வேலியில் தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-07-08 22:56 IST   |   Update On 2017-07-08 22:56:00 IST
நெய்வேலியில் தந்தை, மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 21-வது வட்டம் இனாயத் தெருவைவச் சேர்ந்தவர் ராஜீ(வயது 58). மரவேலை செய்யும் ஆசாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சரவணகுமார்(22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து கோவில் பட்டியில் வசித்து வருகிறார்.

ராஜீவின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜீ தன் மகன் சரவணகுமாருடன் வீட்டில் வசித்து வந்தார். சரவணக்குமார் தன் தந்தைக்கு உதவியாக மரவேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் மகன் சரவணக்குமாரை பார்த்து வெளியே சென்று வேலைக்கு செல்ல வேண்டியது தானே என ராஜீ பலமுறை கூறினார். இதனால் மனமுடைந்த சரவணக்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது சரவணக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது வெளியே சென்று வீட்டுக்கு வந்த ராஜீ தன் மகன் சரவணக்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். கதறி அழுதார். பின்னர் அவர் ஒரு டைரியில், என் மகன் இறந்த பிறகு எனக்கு இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை. என் மரணத்துக்கு யாரும் காரணம் கிடையாது என எழுதினார். அதன் பின்னர் ராஜீவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். ஜன்னல் வழியாக திறந்து பார்த்தபோது தூக்கில் தந்தை-மகன் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜீ, சரவணக்குமார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News