செய்திகள்

தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2017-07-03 11:06 GMT   |   Update On 2017-07-03 15:58 GMT
தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

தக்கோலம்:

அரக்கோணம் அடுத்த தக்கோலம் கணபதிபுரம் கிராமத்தில் நேற்று முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டாபி மனைவி வசந்தா (வயது65). என்பவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வசந்தா அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தக்கோலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News