செய்திகள்

ஆண்டிப்பட்டியில் குடிநீர் பிடிப்பதில் தகராறு: கணவன்-மனைவி மீது தாக்குதல்

Published On 2017-07-03 09:54 GMT   |   Update On 2017-07-03 09:54 GMT
ஆண்டிப்பட்டியில் குடிநீர் பிடிக்கும் தகராறில் கணவன்-மனைவி தாக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆலந்தளிர் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி. இவரது மனைவி பஞ்சம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் மனைவி மஞ்சம்மாள் அங்கு வந்தார்.

அப்போது 2 பேருக்கும இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது இருவரும் குழாயடி பகுதியில் கடுமையாக மோதிக் கொண்டனர். தகவல் அறிந்த பரமசிவத்தின் உறவினர்கள் 2 பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் திடீரென கோட்டைச்சாமி, அவரது மனைவி பஞ்சம்மாள் மீது சரமாரியாக தாக்கினர். இது குறித்து கோட்டைச்சாமி கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சம்மாளை கைது செய்தனர். பரமசிவம் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News