செய்திகள்
அனுமதியை மீறி உண்ணாவிரதம் இருந்த தூய்மை பணியாளர்கள்.

மாநகராட்சி வளாகத்தில் அனுமதியின்றி உண்ணாவிரதம் 40 தூய்மை பணியாளர்கள் கைது

Published On 2017-06-21 10:24 GMT   |   Update On 2017-06-21 10:24 GMT
ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சார்பில் உண்ணாவிரதம் இருந்த 40 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் இருக்க திரண்டனர். அவர்கள் ஈரோடு மாநகராட்சி கமி‌ஷனர் சீனி அஜ்மல் கானிடம் பேச்சு வார்த்தை நடத்த சென்றனர். ஆனால் அவர் அலுவலக வேலை காரணமாக வெளியே சென்று விட்டதால் அவர்கள் திரும்பி வந்து விட்டனர்.

இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திடீரென உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழ்நாடு தூய்மை பணியில் புதிதாக ஆயிரம் பணியிடங்களை உருவாக்கி பணி வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக தூய்மை பணியில் டிரைவர்களாக இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சிட்டி அலவன்ஸ் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீசார் உண்ணாவிரதம் இருக்க உங்களுக்கு அனுமதி இல்லை என கூறி 6 பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News