செய்திகள்

நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2017-06-15 17:07 IST   |   Update On 2017-06-15 17:07:00 IST
நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

ஈரோடு, திருப்பூர் கரூர் மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் பவானிசாகர் அணை நீர் மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 39.73 அடியாக இருந்தது.

அணையின் நீர் பிடிப்பு பகுதியான ஊட்டிமலை பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் நேற்று இரவில் இருந்து அணைக்கு தண்ணீர்வரத்து கொஞ்சம் அதிகரித்து உள்ளது.

நேற்று அணைக்கு வினாடிக்கு 20 கன அடி மட்டுமே தண்ணீர் வந்தது. நேற்று நள்ளிரவில் இருந்து இது கொஞ்சம் உயர்ந்து வினாடிக்கு 287 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஊட்டி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் இதனால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

Similar News