செய்திகள்

தந்தை திட்டியதால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-06-08 16:23 IST   |   Update On 2017-06-08 16:23:00 IST
கருவேப்பிலங்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ளது தேவங்குடி. இந்த பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகள் துர்காதேவி (வயது 19).

இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று துர்கா தேவி தனது தம்பியுடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த பாலமுருகன் சாப்பாடு தரும்படி கேட்டார்.

அதற்கு துர்காதேவி இன்னும் சமைக்கவில்லை என்றார். இதனால் பால முருகன் தனது மகளை திட்டியுள்ளார்.

தந்தை திட்டியதால் மனவேதனை அடைந்த துர்காதேவி வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் துர்காதேவி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கருவேப்பி லங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News