செய்திகள்

கருவேப்பிலங்குறிச்சியில் போலி டாக்டர் கைது

Published On 2017-06-08 15:57 IST   |   Update On 2017-06-08 15:57:00 IST
கருவேப்பிலங்குறிச்சியில் போலி டாக்டர் சரவணனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த ஊசி, மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

விருத்தாசலம் அருகே உள்ள வல்லியம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள தேவங்குடி சாலையில் மருந்து கடை வைத்துள்ளார்.

டிப்ளமோ பார்மசி படித்த இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக புகார் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து விருத்தாசலம் தலைமை டாக்டர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சரவணன் நடத்தி வந்த மருந்து கடையில் ஆய்வு செய்தனர்.

அப்போது சரவணன் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.

இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து போலி டாக்டர் சரவணனை கைது செய்தனர்.

மேலும் அவர் மருந்து கடையில் வைத்திருந்த ஊசி, மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News