செய்திகள்
நாடகங்கள் முடிவுக்கு வந்தால் தான் அ.தி.மு.க. அணிகள் இணைவது சாத்தியம்: ஓ.பன்னீர்செல்வம்
நாடகங்கள் முடிவுக்கு வந்தால் தான் அ.தி.மு.க. அணிகள் இணைவது சாத்தியம் என்று விருத்தாசலத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
விருத்தாசலம்:
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருத்தாசலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. 2 அணிகள் இணையும் என்று நினைக்கிறோம். தர்மயுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த அணியினர் பல்வேறு விதமான நாடகங்களை நடத்தி வருகின்றனர். அந்த நாடகம் முடிவுக்கு வரும்போது, இணைப்பு சாத்தியாகும்.
ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் உரிய நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதே போல் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கழகம் விடுபட வேண்டும். அதுவரை எங்களது கோரிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஜெயலலிதாவிற்கு மருத்துவ சிகிச்சை அளித்தபோது, டாக்டர்கள் தெரிவித்த தகவல்களை நம்பி தான் நாங்கள் அமைதியாக இருந்தோம். அப்போது, ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளில் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று நான் அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடமும், தம்பிதுரையிடமும் பலமுறை வலியுறுத்தினேன்.
ஜெயலலிதா கொள்கையின் அடிப்படையில் நல்லது பயக்கின்ற எந்த ஒரு திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம். மக்கள் எதிர்க்கும் திட்டங்களை எதிர்ப்போம். தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி.தினகரன் கட்சியை விட்டு விலகுகிறேன் என்று சொன்னார். ஆனால் தற்போது, கட்சியில் யாரையும் நீக்கமுடியாது என்று கூறியுள்ளாரே? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம், அவரிடம் தான் பதில் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருத்தாசலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. 2 அணிகள் இணையும் என்று நினைக்கிறோம். தர்மயுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த அணியினர் பல்வேறு விதமான நாடகங்களை நடத்தி வருகின்றனர். அந்த நாடகம் முடிவுக்கு வரும்போது, இணைப்பு சாத்தியாகும்.
ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் உரிய நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதே போல் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கழகம் விடுபட வேண்டும். அதுவரை எங்களது கோரிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஜெயலலிதாவிற்கு மருத்துவ சிகிச்சை அளித்தபோது, டாக்டர்கள் தெரிவித்த தகவல்களை நம்பி தான் நாங்கள் அமைதியாக இருந்தோம். அப்போது, ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளில் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று நான் அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடமும், தம்பிதுரையிடமும் பலமுறை வலியுறுத்தினேன்.
ஜெயலலிதா கொள்கையின் அடிப்படையில் நல்லது பயக்கின்ற எந்த ஒரு திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம். மக்கள் எதிர்க்கும் திட்டங்களை எதிர்ப்போம். தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி.தினகரன் கட்சியை விட்டு விலகுகிறேன் என்று சொன்னார். ஆனால் தற்போது, கட்சியில் யாரையும் நீக்கமுடியாது என்று கூறியுள்ளாரே? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம், அவரிடம் தான் பதில் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.